மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்தின் வரிப்பணத்தை இல்லாது செய்யும் வகையில் செயற்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி பதிவு தொடர்பான தரவுகளை மாற்றி சொகுசு கார் ஒன்றின் தரவுகளை பதிவு செய்து அரசாங்கத்தின் வரிப்பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி நிரலாளர், அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி ஆணையாளர், புலனாய்வு உதவியாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin