யாழ். சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin