அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய பூட்டான் நாட்டு பெண்ணை படுகொலை செய்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை சம்பவத்தின் பின்னர் ஜூட் விஜேசிங்க தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டதாகவும் அவரது உடம்பில் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட ஜூட் விஜேசிங்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணியாற்றுவதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin