இந்தியா வெற்றி! தொடர் சமன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடியது.

முதலாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.

அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 100 ஓட்டங்கள் குவித்தார்.

202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஒட்டங்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Recommended For You

About the Author: admin