மதுபோதையில் சிறைச்சாலை கைதி: இடமாற்றம் செய்யப்பட்ட அத்தியட்சகர்

கண்டி பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலை முகாம் அத்தியட்சகரின உத்தியோகபூர்வ இல்லத்தில் கைதி ஒருவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அத்தியட்சகர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று (14) கொழும்பு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு அமைய அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்துக்கொள்ள அத்தியட்சகர், கண்டி பிரதேசத்தை சேர்ந்த உயர் பதவிகளை வகிக்கும் நபர்களிடம் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

எனினும் சிறைச்சாலைகள் திணைக்களம், அத்தியட்சகரை இடமாற்றம் செய்ய எடுத்த தீர்மானத்தை மாற்றவில்லை எனக்கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin