சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கமைய சாவகச்சேரியில் பொலிஸாருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது வாகனத்தில் இருந்த 7 கிலோ கஞ்சாவை மீட்டனர்.

மேலும் குறித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin