தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்றால் கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறிய ஆலை உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வெளியிடப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவேஇ உற்பத்திகளை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கும் போது, ​​இது தொடர்பில் நுகர்வோருக்கும் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin