இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற தாய் கைது

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 3 பெண்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தாய், பொலன்னறுவை மற்றும் ராகம பிரதேசத்தில் உள்ள இரண்டு பெண்களுக்கு தனது பிள்ளைகளை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகி உள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Recommended For You

About the Author: admin