கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள்

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கையாண்டுள்ளனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல் கிடைத்ததும், கடற்படை வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.

அப்பகுதியில் வசிப்பவர்களுடன் இணைந்து கடற்படை வீரர்கள், குறித்த திமிங்கல சுறாவை மீண்டும் ஆழமான கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin