ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர் நல்லூரில் வழிபாடு

இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்

இந்திய ஆந்திராமாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 மேற்பட்டகுழுவினர்கள் இவ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்..

இவர்கள் யாழ். வரலாற்றுச் சின்ன இடங்கள், ஆலயங்கள் என்பனவற்றை பார்வையிடயுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN