நல்லூரில் நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,
நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில்,
நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு, 04.12.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

நாவலர் பெருமானுக்கான குருபூஜையைத் தொடர்ந்து, கலாவித்தகர் திருமதி மா. அனந்தலெச்சுமி அவர்களால் திருமுறைப் பாராயணமும்
நவாலி, கதிர்காம முருகன் பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி, குருகுலத்தில் நடாத்தப்பட்டு வரும் புராணபடன வகுப்பு மாணவர்களால் “நாவலர் வெண்பா இசை ” நிகழ்வும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN