சுவிஸில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள் நிகழ்வு!

தமிழின மக்களுக்கான உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று(28.11.2023) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor