காசாவில் சிக்கியுள்ள இலங்கை குடும்பம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் திருப்பி அனுப்புவதற்கு உதவிகளை செய்துள்ளது.
நவம்பர் 24 அன்று அவர்கள் கொழும்பு வந்தவுடன், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் நாடு திரும்பிய இலங்கையர்களை வரவேற்றதாக திங்கட்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை வரவேற்றனர்.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் நாடு திரும்பியவர்களுக்கான தளவாடங்கள் மற்றும் விமான போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாக்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor