யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தண்ணீர்தாங்கி வீதியில் கடந்த 09 ஆம் திகதி 14 வயது நண்பர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகப் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த வேகத்தடுப்பு அணையுடன் இடறி இடது பக்கம் இருந்த மதிலுடன் மோதி பின்னர் வலது பக்கம் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தின் போது, தலைக்கவசம் அணியாத இருவரும் அவ்விடத்தில் மயங்கிய நிலையில் உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் இன்றைய தினம் (14-11-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பின்னால் இருந்து பயணித்த சிறுவன் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவத்தில் நாலாம் குறுக்குத் தெரு குருநகரைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Recommended For You

About the Author: webeditor