கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும், கோடாக்களும் கைப்பற்றபட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (10,11,2023) அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்

ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: webeditor