தசராவுக்கு ராவண உருவ பொம்மை எரிக்காத இந்திய கிராமம்..!

துர்க்கை அம்மனுக்காக நவராத்ரி திருவிழா கோலாகலங்கள் எல்லாம் முடிந்து ஓய்ந்துவிட்டன. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் தசரா எனப்படும் தீபாவளி வர இருக்கிறது. இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்புகள் ஆரம்பம் ஆகியுள்ளன. ராம் ராவணணை வாதம் செய்யும் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன.

தசராவின் முக்கிய மரபுகளில் ஒன்று ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பது, இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் நகரில்,மட்டும் உள்ளூர் மக்கள் ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு இருக்கிறோம்.

ராமர் ராவணனை வாதம் செய்த பண்டிகை தான் தசரா / தீபாவளி. ஒரு அரக்கனை கொன்று தன் மனைவியை மீட்ட நிகழ்வை நினைவுறுத்தவே ஆண்டுதோறும் நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால் ஏன் இந்த இந்திய கிராமத்தில் மட்டும், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதில்லை என்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கலாச்சார மற்றும் மத காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

மத காரணம்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பைஜ்நாத் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய மதத் தலமாகும். மேலும் ராவணன் சிவபெருமானின் மிகப் பெரிய பக்தர்களில் ஒருவர். இறைவன் மீது ராவணனுக்கு உள்ள பக்தி அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி பக்தி கொண்டதால் தான் சில வரங்களை ராவணன் பெற்றிருப்பார். அப்படி இறைவனை மகிழ்வித்து வரம் பெற்றவன் என்றால் சிவனுக்கு பிடித்தவனாக இருப்பார்.

அப்படியான சிவபக்தனின் உருவத்தை எரிப்பது சிவனையும் அவமதிப்பது போலாகும். அதனால்தான் இங்குள்ள மக்கள் ராவணனின் உருவ பொம்மையை எரிக்க மாட்டார்கள். ராவணனின் உருவ பொம்மையை எரித்தால் சிவபெருமானின் கோபம் வரும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்! ராவணன் மட்டுமல்ல அவனது சகோதரன் கும்பகரன் மற்றும் மகன் மேகநாதர் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் இவர்கள் இருப்பதில்லை.

மரண சம்பவம்:

சில அறிக்கைகளின்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு தசரா பண்டிகையைக் கொண்டாட முயன்ற சில மக்கள், அடுத்த தசராவுக்கு முன்பே இறந்துவிட்டனர். அதற்கான உறுதியான காரணம் இல்லாததால் இது தசரா கொண்டாட முயன்றதன் விளைவு என்று நம்பத் தொடங்கினர். அதன் பயம் காரணமாக இனி எப்போதும் அதற்கான முயற்சிகள் கூட கூடாது என்று முடிவெடுத்துவிட்டனர்

பைஜ்நாத் பற்றி..

சரி இவ்வளவு நேரம் அதன் நம்பிக்கை தசராவின்போது உருவ பொம்மை எரிக்காதது பற்றி எல்லாம் பேசிவிட்டோம் அந்த கிராமத்தின் சிறப்புகளை இப்பொது சொல்கிறோம். பைஜ்நாத் என்பது இமையமலைச் சாரலில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும், இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பைஜ்நாத் தாமுக்கு சொந்தமான இடமாக அறியப்படுகிறது.

இங்குள்ள கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.பைஜ்நாத் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் தோற்றம் பிராந்திய கத்யூரி வம்சத்தின் ஆட்சியில் இருந்து அறியப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் காங்க்ரா பள்ளத்தாக்கின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில், தசராவுடன் தொடர்புடைய பரவலான பழக்கவழக்கங்களை விட உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் முன்னுரிமை பெறுகின்றன. இங்குள்ள திருவிழா விரிவான கோவில் சடங்குகள், பூஜைகள் மற்றும் மதக் கூட்டங்களுக்கான நேரமாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும், தெய்வங்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும் கோயிலுக்கு வருகிறார்கள்.

Recommended For You

About the Author: admin