கடும் பொருளாதார நெருக்கடியால் பிச்சக்காரர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.

இந்நிலையில் அங்கு பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் அனுப்பப்படுவதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு தலை குனிவு
அதேவேளை அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம். அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாது பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர். இவர்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன.

எனினும் சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘உம்ரா விசா’ எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைவதால் அவர்களை தடுப்பதற்கு சவுதி அரேபியாவும், ஈராக்கும் திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.

அந்த நாடுகளில் சாலைகளில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுவதுடன் , இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் வெளியான விடயம் உலக அரங்கில் பாகிஸ்தானை இது தலைகுனிய வைத்துள்ளது

Recommended For You

About the Author: webeditor