பிரித்தானியாவில் பாடசாலை சென்ற மாணவியை கத்தியால் குத்திய சிறுவன்

பிரித்தானியாவில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட் அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வெல்லஸ்லி சாலையில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் அவசர குழுவினர் மாணவியின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவி கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டு பேருந்துக்கு அருகே சரிந்து விழுந்த நிலையில் அதனை அவதானித்த பேருந்து சாரதி மற்றும் பிற பயணிகள் மாணவியை காப்பாற்ற விரைந்துள்ளனர்.

இந்த கத்திக்குத்து சம்பவம் காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற நிலையில், காலை 9.20 மணியளவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸார் வழங்கிய தகவலின்படி, பாதிக்கப்பட்ட மாணவியும், தாக்குதலை மேற்கொண்ட சிறுவனும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும், எனவே தாக்குதலுக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor