யாழ் வடமராச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற வாகனம் தடம்புரண்டு நேற்று(21) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக பயணித்த கப் ரக வாகனம் முள்ளி சந்தி பகுதியில் திருப்ப முற்பட்ட வேளை, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதன்போது வாகனத்தின் பின்னால், மணலில் இருந்து பயணித்த குறித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இளைஞர் உயிரிழப்பு

இதனையடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: webeditor