விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேசத்திற்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த ராக்கெட்டில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.

இவ்வாறான நிலையில் குழு-7க்கு முன்னதாக அனுப்பப்பட்ட குழு-6 இன் பணிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணி இன்றைய தினம் நடைபெற்றது. இந்த பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட குழு-6, அதாவது விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன், ஆண்ட்ரி பெட்யாவ், சுல்தான் அல் நெயாடி மற்றும் வாரன் ஹோபர்க் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor