நித்தியானந்தா குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் போது நித்தியை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என பலமுறை உத்தரவிட்டு இருந்தது.

ஆனாலும் ஆஜராகமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிள்ளனர்.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி. மேலும், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor