தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது!

அரச தென்னந்தோப்பில் தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தோட்டக் காவலர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டு மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ரத்மல்கர என்ற பகுதியில் இச் சம்பவம் இன்று (18.08.2023) இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் மாதம்பே பனிரெண்டாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் தோட்ட நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்ட போது அவரிடமிருந்து திருடப்பட்ட 182 தேங்காய்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்மல்கரவிலுள்ள அரச தென்னந்தோப்பில் தொடர்ச்சியாக தேங்காய் திருட்டு இடம்பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor