சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய் மொழிப் பரீட்சை தொடர்பான செய்தி!

யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சை இம்மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் பரீட்சார்த்திகள், தமது பிரதேச செயலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று , அதனை பூர்த்தி செய்து கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரிடம் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

அத்தோடு எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் என்பதனையும் உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு குறித்த திகதிகளில் வாய் மொழி பரீட்சையில் தோற்ற முடியும் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor