வாகன இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற அடிச்சட்ட வாகன இலக்கங்களை மீள பொறிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நடவடிக்கை எதிர்வரும் இம்மாதம் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார் வாகனப் பதவுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு யாழ்.மாவட்ட செயலாளர் குறித்த திகதிகளில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப் பொறித்துக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor