வறுமையால் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வறுமையின் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சமபவம் சூரியாரா செவனகல இந்துனில்புர பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

நிதி நெருக்கடியால் விரக்தி
சிறுவயதிலேயே தந்தை இழந்த மாணவி தாயாருக்கு நிலையான வருமானம் இல்லாத நிலையில் நெலும்சிறிகமவில் உள்ள சிறிய வீடொன்றில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக குறித்த மாணவி கடும் விரக்தியில் வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வகுப்பு ஆசிரியையின் விருந்து வைபவமொன்றில் பங்கேற்க முடியாமல் மாணவி மிகுந்த ஏமாற்றத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor