யாழில் இருந்து குருந்தூர் மலை சென்றவர்களால் பதற்றம்!

யாழில் இருந்து சென்ற குழு ஒன்று பால் ஊற்ற முறபட்டதால் குருந்துர் விகாரையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள விகாரைக்கு அப்பால் சிலை அமைந்துள்ள இடத்தில் பழமையான கோயில் இருப்பதாகக் கூறி, யாழ்.வாசிகள் குழு ஒன்று வந்து சிலைகளை புதைத்து, அந்த இடத்தில் பால் ஊற்றுவதற்குத் இன்று (18) தயாராகி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடும் வாக்குவாதம்
குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்திருந்தது. அங்கு, சம்பந்தப்பட்ட குழுவினருக்கும், பிக்குகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor