இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட இருக்கும் விசேட நடவடிக்கை!

இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமளவான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய, ஊவா மாகாணங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பல இடங்கள் இருப்பதாகவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் வளி மாசடைவு குறைந்தளவில் காணப்படுவதால், நிலையான சுற்றுலாத் தளமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விமான நிலையம் மற்றும் பூங்காக்களில் நெருக்கடி ஏற்படாத வகையில் சுற்றுலாத்துறை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்

Recommended For You

About the Author: webeditor