வவுனியாவில் உயிரிழந்த மாணவர்களுக்கு அனுதாபம் வெளியிட்டுள்ள வடக்கு ஆளுநர்

வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் P. S. M. Charles தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பதை அனைவரும் உறுதி செய்வோம் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor