மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் முறை தவறி செயற்பட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் தன்னுடைய விடுதிக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (16.08.2023) முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கிணங்க எதிர்வரும் (22.08.2023) ஆம் திகதி வரையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய விடுதிக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15.08.2023) மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார்.

அதன்போதே, ஆசிரியர் அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor