வேட்டைக்கு செல்ல துப்பாக்கியை கொடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

இஸ்ஸனெவ வனப் பகுதியில் இரவு நேரத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்குரிய T -56 துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் மொரவெவ பொலிஸின் கீழ் உள்ள ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய இரு சந்தேகநபர்களும் வஹல்கட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் பயணிகள் போக்குவரத்து நேரக் கண்காணிப்பாளராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் இஸ்ஸனெவ பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை காவல் காத்துக் கொண்டிருந்த ஏனைய இரு சந்தேக நபர்களை சந்தித்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக தனது கடமை ஆயுதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு காவல் குடிசையில் உறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor