மேர்வின் சில்வாவிற்கு எதிராக யாழில் முறைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா,

தலைகளுடன் களனி திரும்புவேன்
விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால் கை வைத்தவர்களின் தலைகளுடன் களனி திரும்புவேன் என கூறிய கருத்திற்கு எதிராக யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor