புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழி பயன்பாடுகளை அதன் அதிகாரப்பூர்வ மொபைல் ஃபோன் பயன்பாடு DOE மூலமாகவும் அணுகலாம்.

Recommended For You

About the Author: webeditor