வவுனியாவில் யானைக்கு வெடி வைக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்

வவுனியாவில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தலைவர்
இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கேட்டு நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor