பொலிஸ் நிலையத்திற்குள் கைகலப்பு

பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூவர்
இது தொடர்பில் விசாரணைக்கு மூவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் கலகம் விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டதுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor