மக்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

உதவி திட்டம்

அந்த பதிவில், அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் இல்லை.

இதேவேளை எங்களுக்கு 760,000 முறையீடுகள் மற்றும் 10,000 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை இலக்காகக் கொண்டு விரைவில் மதிப்பீடு செய்யப்படுவதுடன் வளங்களை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor