முன்னணியின் மகளிர் அணி தலைவி உட்பட நால்வர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர்,
மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன்,
யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15.06.2023 இன்று மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தனர்.

இரணைமடு சந்தியிலுள்ள மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் இன்று காலை 9.45 மணி தொடக்கம் 2.00 மணி வரை வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

வாக்கு மூலம் பெற்ற பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN