வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை  ஆசிரியர் நியமனம்

கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்  செயலாளர் அ. உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN