“சிவனடியார்களுக்கு திருவோடு அளிக்கும் நாயனார்” சிறப்புச் சொற்பொழி

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால திருகுணானந்தக்குருக்கள் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 09 ( திருநீலகண்ட நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் தேவஸ்தானப் பிரதான மண்டபத்தில் 09.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்  ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் ச. நவநீதன், ” சிவனடியார்களுக்கு திருவோடு அளிக்கும் நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN