“ஜெபமாலை தந்த சற்குருநாதா” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  09.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி நாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றுவார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் ” ஜெபமாலை தந்த சற்குருநாதா ” என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN