இன்று சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் , எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை எழுதும் கைதிகள்
அதேசமயம் இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் , சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor