நோய் நொடி இல்லாமல் வாழ சிறந்த வழி

நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு ஆன்மீகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று நோய் நொடி இல்லாமல் வாழ நாம் செய்ய வேண்டிய இரண்டு தானங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த இரண்டு பொருட்களை உங்கள் கைகளால் வாங்கி, இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் குடும்பத்தில் இருப்பவர்களுடைய நோய் நொடி பிரச்சனை தீரும்.

படுக்கையிலேயே இருந்து கஷ்டப்படுபவர்களுக்கு கூட ஒரு விடிவு காலம் பிறக்கும். அது மட்டுமில்லாமல் இறக்கும் தருவாயில் கூட இறப்பு நமக்கு சுகத்தை கொடுக்கும்.

அகால மரணம் ஏற்படாது. நாம் இருக்கும் போது மட்டுமல்ல, இறக்கும் போது கூட நமக்கு நன்மையை தரக்கூடிய இந்த தானத்தை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா.

நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு. நோய் நொடி தீர, நல்லபடியாக உயிர் பிரிய செய்ய வேண்டிய தானம்:
பாய், போர்வை அதுதான் நீங்கள் தானம் செய்ய வேண்டிய பொருட்கள். இந்த இரண்டு பொருட்களுக்கு இத்தனை மகத்துவமா என்று சில பேர் நினைக்கலாம். இன்று நாம் படுத்து உறங்குவதற்கு எத்தனையோ வகையான கட்டில் மெத்தைகள் வந்துவிட்டது. ஆனாலும் இந்த பாய்க்கு இருக்கக்கூடிய மகத்துவம் என்பது தனிதான்.

கோரைப்பாய் போட்டு தினமும் படுத்து தூங்கினால் உடல் ஆரோக்கியம் பெறும். நோய்நொடிகள் நம்மை அண்டாது என்பது முன்னோர்களுடைய கூற்று. அதனால்தான் நம் முன்னோர்கள் தினமும் உறங்குவதற்கு பாயை பயன்படுத்தி வந்தார்கள்‌. கமாக மெத்தையில் உறங்குவதை தான் விரும்புகின்றோம். பரவாயில்லை.

ஆனால், இன்றும் கிழிந்த பாய் கூட இல்லாமல் தரையில் உறங்கும் குடும்பங்கள் எத்தனையோ பேர் நம்முடைய நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுடைய வீட்டின் அருகில் யாராவது பாய் கூட இல்லாமல், பெட்ஷீட் கூட இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு உங்கள் கையால் கோரைப்பாயையும் போர்வையையும் வாங்கி தானமாக கொடுங்கள்.

குறிப்பாக உங்களுடைய குடும்பத்தில் வயதான முதியவர்கள் யாராவது படுத்த படுக்கையிலேயே இருந்து மிகவும் வேதனைப்படுகிறார்கள். உயிர் இருக்கிறது. ஆனால் நடமாட முடியாது.

சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், அவர்களுடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், நல்லபடியாக சிவலோகத்தை அடைய வேண்டும் என்றாலும் இந்த தானத்தை வீட்டில் இருப்பவர்கள் செய்யலாம்.

வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை சாந்தி அடையச் செய்யும். உங்களுடைய குடும்பத்தில் நீங்களோ அல்லது உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களோ, அவர்களுடைய தாய் தந்தையரை சரியாக பார்த்துக் கொள்ளாமல் தவிக்க வைத்திருந்தால், அந்த சாபம் உங்கள் குடும்பத்தை தொடரும்.

அந்த சாபத்திலிருந்து விடுபட வேண்டும் என்றாலும் இந்த இரண்டு பொருட்களை தானமாக கொடுக்கலாம். இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உயிர் எந்த நேரத்தில் எப்படி பிரியும் என்றே சொல்ல முடியாது. உயிர் பிரியும்போது நமக்கு அந்த கஷ்டமே தெரியக்கூடாது. அகால மரணம் வரக்கூடாது.

அதிலும் இந்த கலியுகத்தில் உயிர் எப்படி பிரியும் என்று அந்த ஆண்டவனுக்கே தெரிவதில்லை. வரக்கூடிய அகால மரணத்திலிருந்து காக்கக்கூடிய சக்தியும் இந்த தானத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் தானங்களை செய்து பலன் பெறலாம்.

Recommended For You

About the Author: webeditor