கொழும்பில் வேலை செய்த யாழ் இளைஞன் மாயம்!

கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 13-10-2023 அன்று பலாலி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவித்துள்ளார்.

மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் 7 மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போன இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0775988204, 0775547218 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor