மருந்து பொருட்களின் விலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதன்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.

இந்நிலையில் ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor