இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இழந்த சொத்து, இழந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திரும்ப வீடு தேடி வர வைப்பதற்கான எளிய பரிகாரங்கள்.

எளிய பரிகாரம்

வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் தொல்லையால் அவதிபடுபவரை போல் பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்பி வாங்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள்.

யாராவது அவசரம் என பண உதவி கேட்கும் போது நட்பின் அடிப்படையிலோ அல்லது இறக்கப்பட்டோ சிலர் பணம் கொடுத்திருப்பார்கள். ஆனால் பணம் வாங்கிய நபரோ, அந்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிக்கலாம்.

பணத்தை மீட்க பரிகாரம்

பணம் தர வேண்டிய நபருக்கு சூழ்நிலை காரணமாக பணம் வராமல் திருப்பி தர முடியாமல் இருக்கலாம்.

அல்லது அந்த நபர் பணத்தை திருப்பி தரும் எண்ணமே இல்லாமல் இருக்கலாம்.

நீங்களும் பலமுறை பணத்தை கேட்டு சளித்து விட்டு, இனி அந்த பணம் நமக்கு வரவே வராது என நினைத்து பணத்தை திருப்பி வாங்குவதற்கான முயற்சியை கூட கை விட்டிருக்கலாம்.

இப்படி கொடுத்த பணம் திரும்பி வராவே வராது என நினைத்த பணத்தை, உங்களின் பணம் வாங்கிய நபரே மனம் மாறி, அவராக வந்து உங்களிடம் திருப்பி தருவதற்கு சில எளிய முறைகளை வீட்டிலேயே செய்தால் போதும்.
இழந்த பணத்தை திரும்ப பெற

பரிகாரம் கற்பூரம் ஒன்றை ஏற்றி, அது எரியும் சுடரின் மீது இரும்பு கலந்த ஏதாவது ஒரு தட்டினை காட்ட வேண்டும். இப்படி காட்டும் போது அந்த தட்டில் கரி படலம் ஒன்று உருவாகும்.

இந்த கரியை உங்களின் வலது புற நடுவிரலில் எடுத்து ஒரு தெளிவான வெள்ளை காகிதத்தில், உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நபரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த பேப்பரை சிறியதாக மடித்து, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அந்த நபரின் முகத்தை மனதில் நினைத்துக் கொண்டு அவர் உங்களுக்கு பணம் கொடுத்து விட்டதாகவும் உங்களுக்கு வர வேண்டிய பணம் அனைத்தும் வந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நபரின் பெயர் எழுதிய காகிதத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடலாம். பிறகு அதை ஆற்றில் போட்டு விடலாம்.

இந்த பரிகாரத்தை தெற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக வராது என நினைத்த பணம் விரைவில் உங்களின் வீடு தேடி வரும்.

Recommended For You

About the Author: webeditor