பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு கோரும் நுகர்வோர் அதிகாரசபை

நுகர்வோர் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தமது அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சோதனைக்கு செல்லுகின்ற நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிகளவான வர்த்தக நிலையங்களில் முட்டைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பகுதியில் சுற்றிவளைப்புக்கு சென்ற நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் 8 பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor