பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம்
சம்பவத்தில் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடிபோதையில் பேருந்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் பெண் மீது பாலியல் துஷ்பியோகத்திற்கு முயன்ற போது குறித்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Recommended For You

About the Author: webeditor