இன்று வாகரையில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று வாகரையில் முன்னெடுப்பு…

தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வாகரை கதிரவெளி புச்சாக்கேணியில் இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர் சதீஸ் அவர்களின் ஏற்பாட்டில் உறுப்பினர் சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், நகரப் பொறுப்பாளர் தேவகுமார், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள், வட்டாரங்களுக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், வாகரைப் பிரதேச மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அன்னை பூபதியின் நினைவாக கட்சியின் உபதலைவர் அவர்களினால் பொதுச் சுடரேற்றப்பட்டு, கட்சி உறுப்பினர்கள், பொது மக்களினால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் விசேட அம்சமாக அன்னை பூபதியின் நினைவாக வாகரை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor