யாழில் இருந்து விடுமுறைக்கு சென்ற கான்ஸ்டபிள் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் குற்றத்தடுப்பு நடவடிக்கை
மாளிகாவத்தை பொலிஸார் நேற்று (17) இரவு குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அவர் யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் முகாமிலிருந்து விடுமுறையில் வந்திருந்தபோதே ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor