ஆரம்பமாக இருக்கும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி!

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது என யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ந.செந்தூரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களை சேர்ந்த வீரர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

இந்த கரப்பந்தாட்ட சுற்று போட்டி நடத்தப்படுவதற்கான பிரதான நோக்கம், கழகங்களில் உள்ள சிறந்த வீரர்களை விளையாட்டில் ஈடுபடுத்துதல் மற்றும் பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மற்றும் தோல்வி பெற்ற அணிகளையும் இணைத்துகொள்வதற்காகும்.

கரப்பந்தாட்ட போட்டி
இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் நிகழ்வாக குறித்த கரப்பந்தாட்ட போட்டி இடம் பெற உள்ளது.

இது மாத்திரமன்றி பெண்கள் அணியும் இதில் இணைத்துக்கொள்ள விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor