இளம் பெண் ஆசிரியருக்கு பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது!

பெண் ஆசிரியை ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றிலேயே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு
குறித்த தனியார் பாடசாலையில் ஆங்கில கற்பித்தலுக்கு பொறுப்பான 23 வயதுடைய ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor